தோட்டப் பகுதிகளை வலுவூட்டும் செயற்திட்டத்தின் (EURO) செயற்பாட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் முழுநேர ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர். சங்க தலைவர் நிஷாந்த வன்னிஆராச்சி, பொதுச் செயலாளர் சத்துர சமரசிங்ஹ, பொருளாளர் எம்.சுதாகர் ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் கடந்த தினம் பிரதான அலுவலகத்தில் நடைப்பெற்ற ழுழு நேர ஊழியர்களை பாராட்டும் விழாவில் இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர். அங்கு இரத்தினபுர, ஹட்டன், நுவரெலிய ஆகிய கிளைகளை ஊழியர்கள் தங்க விருதிலும், ருஹூணு, புஸ்செல்லாவ கிளை ஊழியர்கள் வெள்ளி விருதிலும், கண்டி கிளை ஊழியர்கள் வெண்கல விருதிலும் கௌரவிக்கப்பட்டனர்.